ஆந்திராவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமில்லி பகுதியில் இருந்து சிந்துரு பகுதிக்கு 25க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
வால்மீகி கொண்டா பகுதி அருகே வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.